×

வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

திருவள்ளூர்: பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (26). இவர், தனது நண்பர் பிரபாவின் பிறந்த நாளை கடந்த 2019 அக்டோபர் 1ம் தேதி நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த அழகு முருகன் பிரபாவை தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக டேனியல் மற்றும் அவரது கூட்டாளிகளான மோகன் உள்பட 5 பேர் 28.10.2019 அன்று அழகு முருகனை சரிமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த விரோதத்தால் அழகு முருகனின் கூட்டாளியான கண்ணதாசன் என்பவர் கடந்த 12.1.2021 அன்று பிரபாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

இந்நிலையில், டேனியல் மற்றும் அவரது கூட்டாளிகளான விக்னேஷ்வரன், லோகேஷ், பால்ராஜ், ஜெகதீசன் ஆகியோர் மீண்டும் கண்ணதாசனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 26ம் தேதி பட்டப்பகலில் கண்ணதாசனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டேனியல் கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்தார். இதற்கிடையில், டேனியல் நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை, நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Tags : Valipar ,Charan , Young man murdered, convicted, surrendered, prosecuted
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...